மது பாட்டில்கள் வைத்திருந்த பெண் கைது

by Staff / 11-08-2024 12:51:44pm
மது பாட்டில்கள் வைத்திருந்த பெண் கைது

மதுரை மாவட்டம் வில்லூரில் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்ற போது அதே ஊரில் மது விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் கண்காணித்த போது அதை ஊரைச் சேர்ந்த சித்ராதேவி 49 என்பவர் மது விற்பனை செய்வதற்காக 27 மதுபாட்டில்கள் வைத்திருந்தார். அப்போது போலீசார் அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via