குளிர்பான மரணம்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு

by Staff / 13-08-2024 12:57:35pm
குளிர்பான மரணம்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பத்து ரூபாய் குளிர்பானம் குடித்த காவியா (6) என்கிற சிறுமி வாயிலும், மூக்கிலும் நுரை தள்ளி உயிரிழந்தார். இது குறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குளிர்பான ஆலையில் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள குளிர்பானக் கடைகளில் சோதனையிடவும், காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Tags :

Share via