ரூ.30-ரூபாய்க்காக நண்பரை கொலை செய்த நபர்
மும்பையில் ஆட்டோ கட்டணத்தை யார் செலுத்துவது என்ற சண்டையில் நண்பரை கொலை செய்த சாயிஃப் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் சாயிஃபும் அவரது நண்பர் சக்கனும் மது அருந்துவதற்காக ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது ரூ.30-ரூபாய்க்காக இந்த சண்டை நடந்துள்ளது. வாக்குவாதம் கைகலப்பாகி சக்கனை சாயிஃப் தள்ளியபோது கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :