முடா ஊழல்: முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி

by Editor / 17-08-2024 11:57:20am
முடா ஊழல்: முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) இட ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குத் தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்துள்ளார். டி.ஜே. ஆபிரகாம், பிரதீப் மற்றும் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த மூன்று மனுக்களின் அடிப்படையில் இது முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முடாவுக்கு சொந்தமான காலி மனையிடங்களை ஏலம் விடுவதில் முறைகேடு செய்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

Tags :

Share via