ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவை ஒட்டி தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
நேற்று ஜப்பான் முன்னாள் பிரதம ர்ஷின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொழுது நாட்டுக்கைத்துப்பாக்கியால் ஒருவன் சுட்டதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பெற்று வந்தஅவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவர் மறைவிற்கு வருத்தம் தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தததோடு தேசியக்கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கும் என்றார். அதன்படி இன்று தேசியக்கொடி அரைக்கொடியில் பறக்க விடப்பட்டது. தமிழக அரசும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தததோடு தலைமைச்செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டது
Tags :