கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் இடம்மாற்றம்.
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாட்டில் கடந்த 12 ஆம் தேதி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் பாப்பாநாடு காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சூர்யா புகாரை பெறவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை ஆயுதபடைக்கு மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத் உத்தரவு.
Tags : கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் இடம்மாற்றம்.