தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஏ.கே கமல் கிஷோர் அறிவிப்பு

by Staff / 19-08-2024 02:19:21pm
தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஏ.கே கமல் கிஷோர் அறிவிப்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அமி சங்கரநாராயணசாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதால் 23.08.2024 வெள்ளிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்தில் ள்ள அணைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஏ.கே கமல் கிஷோர் அவர்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரம். அமி சங்கரநாராயணசாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா எதிர்வரும் 23.08.2024 (வெள்ளி) அன்று நடைபெற இருப்பதால் அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குட்பட்டு 23.08.2024 வெள்ளிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கு. நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் எதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1861 (Under Negotiabel Instrument Act 1881)ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைகொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (21.09.2024) சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஏ.கே கமல் கிஷோர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


 

 

Tags :

Share via