மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது;

by Staff / 22-08-2024 02:39:23pm
மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது;

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களிலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகல் நேரங்களிலும் மணல் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்களிடம் இருந்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.இந்த நிலையில் திருச்சுழி அருகே அம்பனேரி பகுதியில் உள்ள ஓடையில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அம்பனேரி பகுதியில் உள்ள ஓடையில் மர்ம நபர்கள் ‌சிலர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.மேலும் போலீசாரை கண்டவுடன் மணல் அள்ளிய நபர்கள் டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். இந்த நிலையில் போலீசார் அந்த டிராக்டரை சோதனை செய்தபோது அதில் சுமார் ஒரு யூனிட் அளவுக்கு ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது.மேலும் தப்பி ஓடிய நபர்களில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் குருந்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்பதும் பதிவெண் எதுவும் இல்லாத டிராக்டரில் மணல் திருடியதும் தெரிய வந்தது. இதனை அடுத்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்ற நபர்களை தேடி வருகின்றனர். ‌

 

Tags :

Share via