இருக்கையில் இருந்துஎழுந்துநின்று முருகன் பாடலை கேட்ட  முதல்வர் ஸ்டாலின்.

by Editor / 24-08-2024 10:38:20am
இருக்கையில் இருந்துஎழுந்துநின்று முருகன் பாடலை கேட்ட  முதல்வர் ஸ்டாலின்.

 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடானது இன்று ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதையடுத்து மாநாட்டை இன்று (ஆகஸ்ட் 24) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் போது சீர்காழி சிவசிதம்பரம் முருகன் பாடலை பாடினார். அவர் பாடுவதை கேட்டதும் முதல்வர் ஸ்டாலின் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றார். பாடல் முடியும் வரை அவர் நின்றபடியே இருந்ததை காண முடிந்தது.முருகக்கடவுள் பாடலைகேட்டு முதல்வர் எழுந்துநின்று மரியாதை செய்தது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.கோயிலிலேயே குடியிருக்கும் ஒருவர் அறநிலையத்துறை அமைச்சராக கிடைத்துள்ளார்,அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

 

Tags : இருக்கையில் இருந்துஎழுந்துநின்று முருகன் பாடலை கேட்ட  முதல்வர் ஸ்டாலின்.

Share via