சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் எடப்பாடி பழனிசாமி.
மத்திய சென்னை திமுக எம்.பி., தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 27) நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியை தயாநிதி மாறன் முறையாக பயன்படுத்தவில்லை என பேசியது தொடர்பாக, தயாநிதி மாறன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக, எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி ஆஜராகிறார்.
Tags : சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் எடப்பாடி பழனிசாமி.