கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பாலத்தில் இருந்து குதித்ததில் எலும்பு முறிவு.

by Editor / 27-08-2024 09:23:41am
கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பாலத்தில் இருந்து  குதித்ததில் எலும்பு முறிவு.

திருவாரூர் மாவட்டம் களப்பால் கிராமத்தில் கடந்த ஒன்பதாம் தேதி முன் பகை காரணமாக மாரிமுத்து என்பவரை மூன்று பேர் கொண்ட கும்பல் நடு ரோட்டில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.இந்த வழக்கில் கொலை செய்ய கடந்த இரண்டு மாத காலமாக திட்டம் தீட்டியதாக ஒரு பெண் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் பல நபர்களை இந்த வழக்கில் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான மனோஜ் என்கின்ற மனோ நிர்மல் ராஜ் வயது 25 என்பவரை கடந்த வாரம் கைது செய்ய சென்றபோது காவலரை வெட்டிவிட்டு தப்பிக்க முற்பட்டபோது காலில் துப்பாக்கியால் சுட்டு மனோ நிர்மல் ராஜை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான மாதவன் வயது 24 என்பவரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் ஆலங்காடு ரயில்வே மேம்பாலம் அருகில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி முத்துப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்ய சென்றபோது போலீசாரை கண்டதும் ரயில்வே மேம்பாலத்தில் வழியே தப்பிச்செல்ல முற்பட்டு பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் வலது கை மற்றும் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து மாதவனை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மாதவனுக்கு வலது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் மாதவன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 

Tags : கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பாலத்தில் இருந்து குதித்ததில் எலும்பு முறிவு.

Share via