இன்று ராகுல் காந்தியின் இந்த தண்டனை காலம்  பற்றிய வழக்கினுடைய தீர்ப்பு

by Admin / 20-04-2023 10:51:08am
 இன்று ராகுல் காந்தியின் இந்த தண்டனை காலம்  பற்றிய வழக்கினுடைய தீர்ப்பு

 கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் பொழுது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏ சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு  இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது .   அதனை  தொடர்ந்து  அவருக்கு ஜாமின் வழங்கி யது இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்ற காரணத்தினால், ராகுல் காந்தி வயநாடு பாராளுமன்ற  உறுப்பினர்   தகுதியை இழப்புகிறார் என்று பாராளுமன்ற செயலகம் அறிவித்தது. இந்நிலையில் ராகுல் காந்தி ஏப்ரல் மூன்றாம் தேதி தன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார் .இந்த மனு ஏப்ரல் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை பின்னர் அறிவிப்பதாக அறிவித்திருந்தார் .இந்நிலையில், இன்று ராகுல் காந்தியின் இந்த தண்டனை காலம்  பற்றிய வழக்கினுடைய தீர்ப்பு இன்று வெளி யாகிறது.

 

Tags :

Share via