தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்.

by Editor / 29-08-2024 09:55:42am
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்.

கோடியக்கரை தென் கிழக்கே 14 நாடில்கள் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல்,சந்திரன், சண்முகம், ஆறுமுகம், மதுரைவீரன் உள்ளிட்ட 4 மீனவர்கள் மீது தாக்குதல்.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகளை அறுத்து பறித்து சென்று, வாக்கி டாக்கி, செல்போன், ஜிபி எஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.இரண்டு படகுகளில் வந்த 7 இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்

Share via