மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தனது மகனுடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய நில பேரத்தில் ......
இன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தேசியப் பாடலான " வந்தே மாதரம் " பாடலின் 150-வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்து ,நினைவு முத்திரை மற்றும் நாணயமும் வெளியிடஉள்ளாா்., அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் " வந்தே மாதரம் " பாடலைப் பாடும் நிகழ்ச்சி நடைபெறஉள்ளது.. .
பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை அதிகபட்ச வாக்குப்பதிவுடன் நடந்து முடிந்தது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான மகா கூட்டணி ஆகிய இரண்டும் முதல் கட்ட வாக்குப்பதிவில் வெற்றி பெற்றதாகக் கூறின, அடுத்தடுத்த கட்டங்களுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.. காங்கிரஸ் கட்சியால் "வாக்காளர் திருட்டு" குற்றச்சாட்டுகள் மற்றும் பீகார் துணை முதல்வர் விஜய் சின்ஹாவின் வாகனத் தொடரணி மீதான தாக்குதல் உள்ளிட்ட சர்ச்சைகளும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது..
ஜனாதிபதி திரௌபதி முர்மு அங்கோலா மற்றும் போட்ஸ்வானாவிற்கு ஆறு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தனது மகனுடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய நில பேரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார், மேலும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவிட்ட விசாரணையை வரவேற்றுள்ளார். .
2020 டெல்லி கலவர சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் மற்றும் மாணவர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்பான வாதங்களை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது..
பந்தய செயலி பணமோசடி விசாரணை தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான ₹11 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் (ED) முடக்கியுள்ளது .. பல்வேறு விசாரணைகள் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளையும் நடத்தியது..
ஏ.பி.பி இந்தியா - அப்பல்லோ மருத்துவமனை போன்ற இந்திய நிறுவனங்கள் தங்கள் சமீபத்திய காலாண்டு முடிவுகளை அறிவித்தன..
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 4வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது .
இன்று இந்திய ஹாக்கியின் நூற்றாண்டு விழா. இந்த நிகழ்வுகள் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொண்டாடப்படும் , ஒடிசா அரசாங்கம் தேசிய அணிகளுக்கான தனது ஸ்பான்சர்ஷிப்பை 2036 வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
.2025 பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில், தற்காலிகமாக 64.46% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். .
Tags :



















