பொங்கல் முன்பதிவு 12-ம் தேதி தொடங்க உள்ளது. 

by Editor / 10-09-2024 04:05:03am
பொங்கல் முன்பதிவு 12-ம் தேதி தொடங்க உள்ளது. 

2025 பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12-ம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தெற்கு ரயில்வே, "ஜன.10ஆம் தேதி பயணம் செய்ய செப்.12ஆம் தேதியும், ஜன.11ஆம் தேதிக்கு செப்.13, ஜன.12ஆம் தேதிக்கு செப்.14, ஜன.13ஆம் தேதிக்கு செப்.15ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. மேலும், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்குமாறு தெற்கு ரயில்வே,கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags : பொங்கல் முன்பதிவு 12-ம் தேதி தொடங்க உள்ளது. 

Share via