இன்று பெரியார் பிறந்த தினம்.. சமூக விடுதலைக்குத் தென்னகத்திலிருந்து பாடுபட்ட தலைவர்

by Admin / 17-09-2024 01:07:04am
இன்று பெரியார் பிறந்த தினம்.. சமூக விடுதலைக்குத் தென்னகத்திலிருந்து பாடுபட்ட தலைவர்

இன்று பெரியார் பிறந்த தினம்.. சமூக விடுதலைக்குத் தென்னகத்திலிருந்து பாடுபட்ட தலைவர்களுள் முக்கியமானவர். சுயமரியாதை, மூடநம்பிக்கை, ஜாதி ஒழிப்பு, விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக மறுமலர்ச்சி செயல்களில் முன்னெடுப்பு செய்து அதை நடைமுறைப்படுத்துவதற்காக போராடிய புரட்சியாளர். கவிஞா்  பாரதிதாசன், பெரியாரைப் பற்றி பாடும் பொழுது " மண்டை சுரப்பை உலகம் தொழும்" என்பதற்கு இணங்க, அவருடைய சிந்தனை திறன், சீர்திருத்தம் வலுவானவை. சமூக விடுதலைக்கு போராடிய அவரின் வழித்தோன்றல்கள் அண்ணா ,கலைஞர் ,எம்ஜி ஆர் ,ஜெயலலிதா போன்றோர்கள் அவருடைய சமூக சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்த தம் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்தி சமூக மேம்பாட்டிற்கு உழைத்தனர்.

 

Tags :

Share via