ஏரியில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

by Staff / 19-10-2024 04:42:58pm
ஏரியில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

பள்ளி விடுமுறை தினமான இன்று சென்னை மணலி அருகே மாத்தூர் ஏரியில் நண்பர்களுடன் குளித்த போது, சேற்று மணலில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மழைக்காலங்களில் குழந்தைகளை நீர்நிலைகள் பக்கம் அனுப்ப வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via