டில்லிக்கு புறப்பட்ட ராஜிவ் ஜோதி யாத்திரை

by Editor / 17-08-2021 09:40:08am
டில்லிக்கு புறப்பட்ட ராஜிவ் ஜோதி யாத்திரை

ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் நினைவகத்தில் இருந்து, டில்லிக்கு புறப்படும் ஜோதி யாத்திரையை, கன்னியாகுமரி எம்.பி., விஜய்வசந்த் நேற்று துவக்கி வைத்தார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா, 20ம் தேதி காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்தில் இருந்து டில்லிக்கு ஜோதி யாத்திரை புறப்படும் நிகழ்வு நேற்று நடந்தது.

கர்நாடக மாநில காங்., பொது செயலர் பிரகாசம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, கன்னியாகுமரி எம்.பி., விஜய்வசந்த் பங்கேற்று, ஜோதி யாத்திரையை துவக்கி வைத்தார். ஸ்ரீபெரும்புதுார் காங்., - எல்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட காங்., தலைவர் நாகராஜன் மற்றும் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.இந்த யாத்திரை பல மாநிலங்கள் வழியாக பயணித்து, 19ம் தேதி மாலை, டில்லியில் சோனியா, ராகுலிடம் ஜோதி ஒப்படைக்கப்பட உள்ளது.

 

Tags :

Share via