பொய் வழக்கு பதிவு செய்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்-ஐஜி அஸ்ரா கார்க் அதிரடி

by Editor / 11-11-2024 05:37:01pm
பொய் வழக்கு பதிவு செய்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்-ஐஜி அஸ்ரா கார்க் அதிரடி

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் திருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவின் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரையும், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு காவல் துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர், தனது நிறுவனத்தின் மேலாளர் சம்பந்தமாக கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது உத்திரமேரூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் பரந்தாமன், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு புலனாய்வு உதவி ஆய்வாளர் துளசி ஆகிய இருவரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த மேலாளர், விசாரணை செய்யாமல் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் கொடுத்த பொய் புகாரின் பேரில், அவரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர் என இருவர் மீதும் வழக்கு தொடுத்துள்ளார். அது தற்போது நிரூபணம் ஆனதால், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உடனடியாக இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : பொய் வழக்கு பதிவு செய்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்-ஐஜி அஸ்ரா கார்க்

Share via