மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை ரயிலில் இருந்து குதித்து மாணவி தற்கொலை.

by Editor / 07-12-2024 07:16:56am
மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை ரயிலில் இருந்து குதித்து மாணவி தற்கொலை.

கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனைச் சேர்ந்தவர் தனுஜா. இவர் பெங்களூருவில் ஒரு விடுதியில் தங்கி இருந்தாக தெரிகிறது. மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அவர் கர்நாடக அரசின் பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) எழுதினார். 2 முறை தேர்வு எழுதியும் குறைந்த மதிப்பெண்களையே எடுத்திருந்தார். இதனால் இருமுறையும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், மனமுடைந்த மாணவி, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : ரயிலில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

Share via

More stories