டாஸ்மாக் பணியாளர்களுக்கு 50% அபராதம்,

டாஸ்மாக் கடைகளில் நுகர்வோர் கேட்கும் மதுபானத்தை ரசீதுடன் வழங்க வேண்டும் என அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அதில், “மதுபானங்களை முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது. விற்பனை புள்ளி விவரத்திற்கும், கையடக்க கருவி புள்ளி விவரத்திற்கும் வேறுபாடு இருக்க கூடாது. வேறுபாடு இருந்தால் 50% அபராதம், ஜிஎஸ்டியுடன் வசூலிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளது.
Tags : டாஸ்மாக் பணியாளர்களுக்கு 50% அபராதம்,