வேலூர் தொகுதி முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

by Editor / 19-08-2021 01:15:29pm
வேலூர் தொகுதி முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

வேலூர் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பா.செங்குட்டுவன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 60.

வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2014-2019 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இருந்தவர் அதிமுகவின் வழக்கறிஞர் பா.செங்குட்டுவன். கடந்த சில மாதங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் கடந்த ஒரு வாரமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பா.செங்குட்டுவன் இன்று (ஆக.19) காலை காலமானார். காட்பாடி திருநகர் பகுதியில் உள்ள வீட்டில் பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அமமுகவுக்கு சென்றவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். கடந்த சில ஆண்டுகளாக கட்சிப் பணியில் இருந்து அவர் விலகியே இருந்தார்.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.செங்குட்டுவன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்தும், அதை சட்ட வழியில் அணுகுவது சட்டத்தில் உள்ள நுணுக்கங்கள் குறித்த புத்தகம் எழுதியுள்ளார்

 

Tags :

Share via