ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது

by Editor / 21-09-2024 12:09:52am
 ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தோமையபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கலந்து மேட்டு தெருவை சேர்ந்த செந்தில்(31), முரளி(34) என்பதும் பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரிய வந்ததை அடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இவர்கள் மீது திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags : ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது

Share via