என்னை விட்டுப் போனால் ஆசிட் அடிப்பேன்... 19 வயது பெண்ணை மிரட்டி திருமணம் செய்த இளைஞர்...

by Admin / 21-08-2021 01:36:37pm
என்னை விட்டுப் போனால் ஆசிட் அடிப்பேன்... 19 வயது பெண்ணை மிரட்டி திருமணம் செய்த இளைஞர்...

வக்கீல்களை வைத்து மிரட்டி 19 வயது பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர்.
 
சென்னை அசோக் நகர் நல்லாக்குப்பம் பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 19ஆம் தேதி மாலை தன் வீட்டின் அருகே உள்ள துணி கடைக்கு 19வயது  மதிக்க தக்க பெண் ஒருவர்  சென்றுள்ளார். அப்பொழுது வழி மறைத்து ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கையில் கத்தியை வைத்து அந்த பெண்ணை கடத்தியதாக கூறப்படுகிறது.

பணிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பிய தாயார் பெண்ணை காணவில்லை என தேடிய பொழுது தீடீரென பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த ஒரு பெண் தொலைபேசியில் அழைத்து தங்கள் மகளை என் மகன் அழைத்து வந்ததாகவும் எங்கள் வீட்டில் பத்திரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் தன் பெண்ணிடம் பேச வேண்டும் என தாயார் வலியுறுத்தியும் பெண்ணிடம் பேசவிடாமல் தடுத்துள்ளார்கள்.இதனால் பெண் தாயார்  குமரன் நகர் காவல்நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.

வழக்கை விசாரித்த குமரன் நகர் ஆய்வாளர் இரண்டு நாட்களாக தேடிய பொழுது வழக்கறிஞர்களை வைத்து திருமணம் முடித்து அந்த பெண்ணை இன்று இரவு  காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த பெண் வீட்டார் 30க்கும் மேற்பட்டோர் தங்கள் பெண்ணை எங்களுடன் அனுப்ப வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
ஆனால் சம்மந்தப்பட்ட பெண் திருமணம் செய்யப்பட்ட இளைஞரோடு செல்வதாக கூறுவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேட்டியளித்த, பெண் வீட்டார் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த வெள்ள என்கிற சிவா (22வயது) தங்கள் பெண்னை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாகவும் எங்களிடம் தொலைபேசி வாயிலாக காப்பாற்றும்படி பேசிய பெண்ணை வழக்கறிஞர்கள் மூன்று பேர் மற்றும் சிவா மிரட்டியதாக இதனால் அந்த பெண் அவனோடு செல்ல ஒத்துக்கொண்டதாக புகார் தெரிவிக்கின்றனர்.

கடத்திய நேரம் முதல் தற்போது வரை கையில் விஷம் மற்றும் கத்தியை வைத்து கொண்டு என்னை விட்டு சென்றால் தான் தற்கொலை செய்துக் கொள்வேன் அல்லது ஆசிட் வீசிவிடுவேன் என காவல் நிலையத்தில் வைத்து பெண்ணை மிரட்டியதாகவும் பெண் வீட்டார் தரப்பில் புகார் தெரிவித்தனர்.

பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள சிவா மீதும் மிரட்டிய வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களின் இதுபோன்ற செயலால் மனமுடைந்த பெண்ணின் தாயார் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக கதவை உடைத்து மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரது உயிரை காப்பாற்றினர்.

சாலையில் நடந்து சென்ற 19வயது இளம் பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டோ வைத்து கடத்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் குமரன் நகர் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via