தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தல்.

செங்கோட்டை - தாம் பரம் இடையே சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்கும் வகையில் அறி முகப்படுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ண விடம் நேற்று தென்காசி தொகுதி திமுக எம்.பி. டாக்டர்ராணி ஸ்ரீகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவிடம் அவர் புதன் கிழமை அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: செங்கோட்டை மற்றும் தாம்ப ரம் இடையே சிலம்பு விரைவு ரயில்(எண்.20681/20682) தினசரி சேவை அறிமுகப்படுத்த வேண் டும். கோவை முதல் மதுரை வரை இயக்கப்படும் மதுரை இன்டர் சிட்டி விரைவு ரயிலை (வண்டி எண். 16721) செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். கொல் லம் விரைவு ரயிலுக்கு (வண்டி என் 16101/16102) பாம் புகோவில் சந்தையில் நின்று செல்ல அனுமதி அளிக்க வேண்டும் தாம்பரம் செங்கோட்டை (வண்டி எண். 20683) செங்கோட்டை விரைவு ரயிலை கொல் லம் வரை நீட்டிக்கப்பட வேண்டும் அதிகரித்து வரும் பயணிகளின் பயன்பாட்டைஈடுசெய்யும் வகை யில் செங்கோட்டை ரயில் நிலை யத்தில் புதிதாக 5 மற்றும் 6 நடை மேடைகளை கட்டவும், ரேக்கு கள் பராமரிப்புக்காக செங்கோட் டையில் ஒரு புதிய ஃபிட்லைனை அமைக்கவும் வேண்டும் சோழபுரம், கரிவலம்வந்த நல்லூர் மற்றும் நயினாரகரம் (ஹால்ட்) ஆகிய இடங்களில் முன்னர் மூடப்பட்ட நிலையங் களை மீண்டும் திறக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார் கோரிக்கைவிடுத் துள்ளார்.
Tags : தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தல்.