ஆட்டோ ஓட்டிய சிறுவன்.. பெண் மீது மோதி விபத்து

by Editor / 12-04-2025 03:39:00pm
ஆட்டோ ஓட்டிய சிறுவன்.. பெண் மீது மோதி விபத்து

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரில், பெண் ஒருவர் சாலையின் ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அந்த பெண் மீது மோதியது. விசாரணையில், ஆட்டோ ஓட்டியது ஒரு சிறுவன் என தெரியவந்துள்ளது. மேலும், 2 சிறுவர்கள் ஆட்டோ பின்னால் அமர்ந்திருந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், 3 சிறுவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via