"நான் ஆண்மையற்றவன்" - சிவசங்கர் பாபா

by Editor / 23-08-2021 04:39:25pm

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா. சாமியார் என்று சொல்லிக்கொள்ளும் இவர் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி டெல்லியில் சிவசங்கர் பாபாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். அவர் மீது 3 போக்சோ வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் ஆன்மீகம் சார்ந்த தொடர்பு நடத்துவதற்காக மட்டுமே பள்ளிக்கு சென்று வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இரத்த கொதிப்பு, நீரிழிவு, இதயம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஜாமின் வழங்காமல் இரண்டு மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னதாக முதல் போக்சோ வழக்கிலும் பாபாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. தற்போது அவரது ஜாமின் மனுவில் மறைந்திருந்த ஒரு விஷயம் அம்பலமாகியுள்ளது. அந்த மனுக்களில் தான் ஒரு ஆண்மையற்றவன் என்பதால் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை எனக் கூறி ஜாமினில் விடுவிக்குமாறு கோரியுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் தனக்கு மேற்கொண்ட ஆண்மை பரிசோதனையில் தனக்கு ஆண்மை இல்லை என முடிவு வந்ததாகவும் சிவசங்கர் பாபா மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

 

Tags :

Share via