அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் காலமானார்.

by Editor / 25-04-2025 09:35:30am
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் காலமானார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கோகுல இந்திராவின் கணவரும், அதிமுக முக்கிய நிர்வாகியுமான சந்திரசேகரன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். கணவர் உடல் மீது கோகுல இந்திரா சாய்ந்து கதறி அழுதது சோகத்தை ஏற்டுத்தியது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று, கோகுல இந்திரா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து, சந்திரசேகரனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 

Tags : அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் காலமானார்

Share via