இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ராயல் சல்யூட்: விஜய்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். "இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
Tags :