இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுக்க இருப்பதாக பாகிஸ்தான் ராணுவ மேஜர் எச்சரிக்கை.

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுக்க இருப்பதாக பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரல் அஹமது ஷெரிப் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, "எங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றிலும் தற்காப்பிற்காகவே இருந்தன. இந்தியாவிற்கு எதிராக பேரழிவு தரும் பதிலடி தாக்குதலை நடத்துவோம்" என குறிப்பிட்டுள்ளார். இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags : இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுக்க இருப்பதாக பாகிஸ்தான் ராணுவ மேஜர் எச்சரிக்கை.