2 வருட காதல் கசந்தது- கட்டிய தாலியை கழற்றி கொடுத்து விட்டு பெற்றோருடன் சென்ற பெண்

by Admin / 25-08-2021 01:51:14pm
2 வருட காதல் கசந்தது- கட்டிய தாலியை கழற்றி கொடுத்து விட்டு பெற்றோருடன் சென்ற பெண்

2 வருடம் காதலித்து திருமணம் செய்த மனைவி தாலியை கழற்றி கொடுத்து விட்டு பெற்றோருடன் சென்றதால் வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

திண்டுக்கல் அருகில் உள்ள ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் சுதர்சன்(21). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக மாரம்பாடிக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது அதேபகுதியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியான 19 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

 2 வருடம் காதலித்து வந்த இவர்கள் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே கோவிலில் திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தனது மகளை காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதல் ஜோடிகள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

அங்கு இருவரது பெற்றோரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவியின் பெற்றோர் அவரை தனியே அழைத்து பேசி தங்களுடன் அழைத்துச்செல்வதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பெண் தனது காதல் கணவர் கட்டிய தாலியை அவரிடம் கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்றார்.

இதை சற்றும் எதிர்பாராத சுதர்சன் அவரிடம் மன்றாடி கேட்டும் அவர் பெற்றோருடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதர்சன் போலீசாரிடமும், பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

 

Tags :

Share via