நிலச்சரிவில் கார் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு

அருணாச்சலப் பிரதேசம்: பனா-செப்பா சாலையில் நேற்றரவு ஏற்பட்ட நிலச்சரிவில் கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டபோது, இரு குடும்பங்கள் பயணித்த கார் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், சஞ்சு 32, அவரது மனைவி தாசும், அவர்களது இரு குழந்தைகள், கச்சுங் (5) மற்றும் நிச்சா (2), ஒரு கர்ப்பிணித் தாய் மற்றும் இரு குழந்தைகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Tags :