காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை!

by Admin / 26-08-2021 12:59:34pm
காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை!

சென்னையில் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி மற்றும் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காப்பகத்தின் பெண் நிர்வாகி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  
 
சென்னை பெரவள்ளூர் ஜவஹர் நகர் 6 வது பிரதான சாலையில் தனியார் காப்பகம் ஒன்று கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் முதியவர்கள் சிறுவர், சிறுமிகள், இளம் பெண்கள் என சுமார் 130 பேர் தங்கியுள்ளனர்

 கொரோனா காலகட்டத்தில் இந்த காப்பகத்தின் நிர்வாக செயலாளராக இருந்து வந்த இசபெல் ரிச்சர்ட்சன் (56), தனது சகோதரரான பென்னர்ட்  ரிச்சர்ட்சன் (51) என்பவரை காப்பக கமிட்டி உறுப்பினர்கள் அனுமதியின்றி காப்பகத்தில் தங்க அனுமதித்து வந்துள்ளார்.

இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பென்னர்ட் ரிச்சர்ட்சன் காப்பகத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மற்றும் 20 வயது இளம் பெண் ஆகிய இருவருக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக  கூறப்படுகிறது.

 பொறுக்க முடியாத கட்டத்தில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை தொடர்பாக 20 வயது இளம் பெண், காப்பகத்தின் கமிட்டி உறுப்பினர்களிடம் புகார் அளித்துள்ளார்.

இளம் பெண் அளித்த புகாரின் பேரில் கமிட்டி உறுப்பினர்கள் விசாரணை மேற்கொண்டதில் கமிட்டி உறுப்பினர்களுக்குத் தெரியாமல் நிர்வாக செயலாளராக இருந்த இசபெல் ரிச்சர்ட்சன் உதவியுடன் அவரின் சகோதரரான பென்னர்ட் ரிச்சர்ட்சன் காப்பகத்தில் தங்கி அங்குள்ள பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதை உறுதி படுத்தினர்.

 இதனையடுத்து காப்பக விதிகளை மீறி செயல்பட்ட காரணத்திற்காக நிர்வாக செயலாளர் பதவியில் இருந்து இசபெல் ரிச்சட்சனை பணியிடை நீக்கம் செய்து கமிட்டி உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.

மேலும், சிறுமி உட்பட இளம் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு பாலியல் தொல்லை அளித்த பென்னர்ட் ரிச்சர்ட்சன் மற்றும் அவரை அனுமதியின்றி தங்க வைத்த அவரது சகோதரி இசபெல் ரிச்சர்ட்சன்  ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கமிட்டி உறுப்பினர்கள் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

. இப்புகாரின் அடிப்பரையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசபெல் ரிச்சர்ட்சனை கைது செய்ததுடன் தலைமறைவாக இருந்த பென்னர்ட் ரிச்சர்ட்சன் என்பவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த பென்னர்ட் ரிச்சர்ட்சன் இன்று போலீசாரின் பிடியில் சிக்கிய நிலையில் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via