அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியின் 59வது வார்டு கவுன்சிலரான ராஜா, ஒமீனா ஃபார்மா டிஸ்டிரிபியூட்டர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16% பங்கு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், மலேசியாவுக்கு தப்பிச்செல்ல விமான நிலையம் சென்ற ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
Tags :