அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

by Editor / 17-06-2025 04:35:43pm
அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது

ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியின் 59வது வார்டு கவுன்சிலரான ராஜா, ஒமீனா ஃபார்மா டிஸ்டிரிபியூட்டர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16% பங்கு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், மலேசியாவுக்கு தப்பிச்செல்ல விமான நிலையம் சென்ற ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
 

 

Tags :

Share via