டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள்... கால் இறுதிக்கு தகுதி பெற்றார் பவினா படேல்...

by Admin / 27-08-2021 01:10:52pm
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள்...  கால் இறுதிக்கு தகுதி பெற்றார் பவினா படேல்...

டோக்கியோ பாராலிம்பிக்கின், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்களும் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் பவினா பட்டேல் பங்கேற்று, 3-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பிரேசில் வீராங்கனை ஜாய்ஸ் டி ஒலிவியராவை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 ஆட்டத்துவக்கத்தில் பின்தங்கி காணப்பட்ட பவினா பட்டேல், பின்னர்  சுதாரித்து கொண்டு 3 செட்களையும் கைப்பற்றினார்.

 

Tags :

Share via