ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் என்ன..? சந்தேகத்தை தீர்த்து வைக்க அ.தி.மு.க. பிரபலம் கோரிக்கை...

by Admin / 27-08-2021 01:15:42pm
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் என்ன..? சந்தேகத்தை தீர்த்து வைக்க அ.தி.மு.க. பிரபலம் கோரிக்கை...

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக தமதுமுகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை 90 சதவீதம்முடிவடைந்த நிலையில், ஆணையத்திற்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தடையாணை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இரண்டு ஆண்டுகள் எதுவும் நடக்கவில்லை என்றும், கோடிக்கணக்கில் அரசுப்பணம் செலவிடப்பட்டது தான் மிச்சம் எனவும் சுட்டிக் காட்டியுள்ள அ.தி.

 
மு.க.முன்னாள் எம்.பி. மைத்ரேயன்,தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை அவிழ்ப்போம் என தி.மு.க. வாக்குறுதி அளித்ததை நினைவுபடுத்தியுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு, கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் உள்ள தடையினை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக தாம் அறிவதாக குறிப்பிட்டுள்ள அவர்,ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை எனமுடிவு வந்தால், ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டரும் அளவற்ற மகிழ்ச்சி அடைவதோடு நிம்மதிப் பெருமூச்சும் விடுவார் என கூறியுள்ளார். எனவே தமிழகமுதலமைச்சர்
 
மு.க.ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்தி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை விரைந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள மைத்ரேயன்,

நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றிலிருந்து சரியாக 100 நாட்களில் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவுநாள் வருகிறது என்றும், அதற்குள்
 
முதலமைச்சர் இதை நிச்சயம் செய்வார் என நம்புவதாகவும் மைத்ரேயன் பதிவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via