பார்முலா 4 கார் பந்தயம்.. இலவசமாக பார்க்கலாம்

சென்னையில் நடைபெற உள்ள பார்முலா 4 கார் பந்தயம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், "பார்முலா 4 கார் பந்தயத்தை 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) காலையில் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம். சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்படும். இரவு 10.30 மணிவரை கார் பந்தய போட்டிகள் நடைபெறும் என கூறியுள்ளார்.
Tags :