வடமாநிலத்தவர் தமிழ் கற்று கொள்ளட்டும்: கனிமொழி

by Editor / 28-06-2025 05:24:02pm
வடமாநிலத்தவர் தமிழ் கற்று கொள்ளட்டும்: கனிமொழி

டெல்லியில் நடைபெற்ற 'ராஜ்பாஷா' நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, இந்தி மொழி குறித்து பேசினார். இது தொடர்பாக இன்று (ஜூன் 28) எம்பி கனிமொழி, "எந்த மொழிக்கும் இந்தி எதிரி அல்ல என்றால், எங்கள் தமிழ் மொழியும் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. அதனால், வட மாநிலத்தை சேர்ந்தவர்களும் தமிழைக் கற்றுக் கொள்ளட்டும். அதுவே உண்மையான தேசிய ஒருங்கிணைப்பு" என்று பேசியுள்ளார்.

 

Tags :

Share via

More stories