பாம்பை மாலையாக போட்ட பாம்பு பிடி வீரர் பலி

மத்திய பிரதேசம் மாநிலம் குணா பகுதியில் பிரபல பாம்பு பிடி வீரர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீடு ஒன்றில் இருந்து பாம்பை பிடித்த பாம்பு பிடி வீரர் தீபக் மஹாவர், தான் பிடித்த பாம்பை கழுத்தில் அணிந்தபடி பைக்கில் கெத்தாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு அவரை கடித்துள்ளது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Tags :