சட்ட மேதை அம்பேத்கரின் 69 -ஆவது நினைவு தினத்தை ஒட்டிதமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்மலர் தூவி மரியாதை.

by Admin / 06-12-2024 01:56:02pm
சட்ட மேதை அம்பேத்கரின் 69 -ஆவது நினைவு தினத்தை ஒட்டிதமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்மலர் தூவி மரியாதை.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினத்தை ஒட்டி அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்  .தம் எக்ஸ் பக்கத்தில் 

.பெரும்பாலான மக்களின் உரிமைகளையும் - கண்ணியத்தையும் மறுத்த, இந்தச் சமுதாயத்தில் வேரூன்றிய சமூக அநீதிகளுக்கு எதிராக நம்மிலிருந்து உருவாகி எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்! கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அவர்! தனது சிந்தனைகளால் நமக்கு உரமூட்டி - நம்மைப் பாதுகாக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் நம்முடைய வாளாகவும் கேடயமாகவும் என்றென்றும் வாழ்கிறார்! அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்!என்று,பதிவிட்டுள்ளாா்.

புரட்சியாளர் அம்பேத்கர், ஏப்ரல்14,1891  - டிசம்பர்6,1956 
 

Tags :

Share via