விநாயகர் சதுர்த்தி கோயில் அருகே பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னீர் குப்பத்தில் விநாயகர் சதுர்த்திக்காக கோயில் அருகே பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம். 4 பேர் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், மேலே சென்ற மின்சாரக் கம்பி மீது இரும்பு ராடு உரசியதில் மின்சாரம் பாய்ந்து பரத் (28) என்பவர் உயிரிழப்பு.ரஜினி (45), தென்னவன் (29) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
Tags : விநாயகர் சதுர்த்தி கோயில் அருகே பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.