தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.84,400க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கடந்த 2 நாட்களும் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.அதன் படி, நேற்று செப்டம்பர் 25ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.10,510க்கும் சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.84,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.தொடர்ந்து இன்று செப்டம்பர் 26ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,550க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,740க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் 153 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,53,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது.



















