சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே
மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த போதைப்பொருள் தொடர்பான விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். தி ஹேக்கில் உள்ள ஐ.சி.சி நீதிமன்றத்தில் பிப்ரவரி 23, 2026 அன்று இந்த முக்கிய விசாரணை தொடங்கியது. டுடெர்டே மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் உள்ளனவா என்பதை இந்த விசாரணை தீர்மானிக்கும். இந்த முதற்கட்ட விசாரணை பிப்ரவரி 23 முதல் 27 வரை நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. 2011 முதல் 2019 வரையிலான காலத்தில் நடந்த பல்லாயிரக்கணக்கான சட்ட விரோதக் கொலைகளுக்கு டுடெர்டே தான் காரணம் என்று அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதில் தாவோ நகர மேயராக இருந்த போது நடந்த கொலைகளும் அடங்கும்.டுடெர்டே மார்ச் 12, 2025 அன்று பிலிப்பைன்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, ஐ.சி.சி வசம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தற்போது நெதர்லாந்தில் உள்ள ஐநா தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார் .80 வயதாகும் டுடெர்டே, தனது உடல்நிலை சரியில்லை என்று கூறி விசாரணையைத் தள்ளிப்போட முயன்றார். ஆனால், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் விசாரணைக்குத் தகுதியானவர் என்று நீதிமன்றம் ஜனவரி 2026-ல் தீர்ப்பளித்தது.
Tags :


















