வடக்கு ஜப்பானில் அமோரி கடற்கரையில் 7.6 ரிக்டர் அளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது
வடக்கு ஜப்பானில் அமோரி மாகாணத்தின் திங்கள் அன்று கடற்கரையில் 7.6 ரிக்டர் அளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆரம்ப சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது விலக்கப்பட்டது.. ஆரம்பத்தில் ஹெக்கை டோ, அமோரி மற்றும் இவார்ட் மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டன ஆரம்பத்தில் மூன்று மீட்டர் வரை அலைகள் எழும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது .இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த சுனாமி அலை நிவாரத் மாகாணத்தின் 0.7 மீட்டர் சுமார் 2 அடி உயரம் கொண்டது மற்றும் அமோரியில் 0.5 மீட்டர் அளவில் காணப்பட்டது..
கடலோரப் பகுதிகளை காலி செய்ய அதிகாரிகள் சுமார் 90 ஆயிரம் குடிப்பாளர்களுக்கு உத்தரவிட்டனர். அமோரியின் ஹச்சினோ ஹே உள்ள ஹோட்டலில் சிலர் காயம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக, இந்த பகுதியில் ரயில்கள் நிறுத்தப்பட்டன .மேலும் அருகில் உள்ள அணுமின் நிலையங்களில் எந்த முறைகேடுகளும் பதிவாகவில்லை என்றும் பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து 5.5 மற்றும் 5.0 அன்று ரிக்டர் அளவுகள் உள்பட பல அதிர்வுகள் பின்னர் ஏற்பட்டன..
Tags :



















