பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் அளிக்கப்பட்டது கண்டனத்திற்குரியதாகும்-நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் அளிக்கப்பட்டு வெறுமனே அரசு போக்குவரத்து கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்அறிக்கையில்,
ஆரம்ப காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்றே அரசு பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக அரசு தமிழ்நாடு பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்று முழுமையாக எழுதுவதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம். வண்ணப்பூச்சி தீர்ந்து விட்டதா.. அல்லது அரசுக்கு தெரியாமல் வண்ண பூச்சி ஒப்பந்ததாரர் ஊழல் செய்து விட்டாரா ..அல்லது போக்குவரத்து துறைக்கு தமிழ்நாடு என்று எழுதினால் கோடிக்கணக்கில் இழப்புதான் ஏற்படுமா... இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுத்த பிறகும்.. திமுக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தமிழ்நாடு என்று பெயரை சேர்க்க மறுத்து அமைதி காப்பது.. ஏன்,.. யாருடைய உத்தரவின் பேரில் தமிழ்நாடு பெயர் தவிர்க்கப்படுகிறது .தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு கசக்கிறதா... திமுக அரசிற்கு இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா.., அல்லது முதலமைச்சர் பொறுப்பேற்பாரா... இதுதான் திமுக அரசு தமிழக வளர்க்கும் முறையா இதுதான் திமுக அரசு தமிழ்நாடு மண் மொழி மானம் காக்கும் முறையா இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா... வெட்கக்கேடு. தமிழ்நாடு என்ற பெயர் ஒவ்வொரு தமிழரின் உயிர்மூச்சு இச்சுடர்மிகு பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காகவே பெருந்தமிழர் சங்கலிங்கனார் 76 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி ,தன்னுடைய இன்னுயிர் ஈந்தார் .கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநில பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதி இருக்க ..திமுக அரசு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா... போக்குவரத்து கழக பேரில் இருந்து தமிழ்நாடு என்பதை திமுக அரசு நீக்கி இருப்பதன் மூலம் தமிழ்நாடு என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவோம் என்று வம்படியாக அறிவித்தது. தற்புகழ்ச்சியானதேதே தவிர ..தமிழ்நாடு என்ற பெயரின் மீதான புகழ்ச்சியானதினால் அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது .நாங்கள் தான் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயரையே வைத்தோம் பொய்ப்பெருமை பேசும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அய்யா ஸ்டாலின் அவர்கள் இந்த கேள்விக்கெல்லாம் பதில் அளிப்பாரா... ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் பழையபடி தமிழ்நாடு அரசு பேருந்துகள் அனைத்திலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்று முழுமையாக எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இல்லை ,என்றால் தமிழ்நாடு பெயர் காக்க நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன் .என்று கூறியுள்ளார்.
Tags :













.jpg)




