பயலாஜிக்கல் இ தடுப்பூசியின் 2வது கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல்...

by Admin / 02-09-2021 04:03:33pm
பயலாஜிக்கல் இ தடுப்பூசியின் 2வது கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல்...

 

பயலாஜிக்கல் இ தடுப்பூசியின்  2வது கட்ட பரிசோதனைக்கு இந்திய பொது மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
 
கொரோனா பரவலை அடுத்து, இந்தியாவில் 3வது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.  அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசி 12 முதல் 17 வயதிலான சிறார்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதிய தடுப்பூசியான பயலஜிக்கல் இ என்ற தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி முதல் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   2வது நிலை பரிசோதனையை 5 முதல் 18 வயதினருக்கு செலுத்தி பரிசோதிக்க பொது மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

 

Tags :

Share via