அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி -தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வேட்பு மனுவை தாக்கல்
இன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மதியம் 3.00 மணியோடு நிறைவு பெற உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று மதியம் தனது வேட்பு மனுவை தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தாக்கல் செய்ய உள்ளார். எடப்பாடி தொகுதியில் அவர் தொடர்ந்து ஐந்தாவது முறையாக போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக விருதாச்சலம் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். கேப்டன் விஜயகாந்த் வெற்றி பெற்ற தொகுதியான விருதாச்சலத்தை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
Tags :



















