பிரதமர் நரேந்திர மோடி15 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக 15 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு முதல் வடசேரி எம் .ஜி .ஆர் சிலை வரை வாகன பேரணி நடத்தவும்திட்டமிடப்பட்டுள்ளது.. கன்னியாகுமரி, நெல்லை , தூத்துக்குடி , தென்காசி உள்ளிட்ட 22 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இப்ரமாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். டெல்லியில் இருந்து விமான மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குமரி மாவட்டத்திற்கு பிரதமர் வருகை புரிய உள்ளார்
Tags :











.png)







