ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஷ் நேரில் ஆஜர்
திமுக ஆட்சியில் தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் ரூ.100 கோடி பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. அந்தச் சம்மனை ஏற்று, சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் அன்பில் மகேஷ் தற்போது நேரில் ஆஜராகியுள்ளார். விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Tags :



















