பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை

by Staff / 09-04-2024 12:53:59pm
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை

ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாயாருடன் அப்பகுதியில் உள்ள கணேஷ் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் வேலைக்குச் சென்றார். அப்போது, யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமியை மிரட்டி கணேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனவுளைச்சலில் இருந்துவந்த சிறுமி நேற்று செங்கல் சூளை அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via